திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க, வேட்பாளர் பரஞ்ஜோதி 14 ஆயிரத்து 608 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 5 தபால் ஓட்டுகளும் தி.மு.க., வேட்பாளர் நேருவுக்கு கிடைத்துள்ளன. 18 வது இறுதி சுற்று எண்ணிக்கையின்படி அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி 68 ஆயிரத்து 804 ஓட்டுகளும், தி.மு.க., வேட்பாளர் கே.என். நேரு 54 ஆயிரத்து 196 ஓட்டுகளும் பெற்றுள்ளனர். ஓட்டு வித்தியாசம் 14 ஆயிரத்து 608 ஓட்டுகள்.

புதுச்சேரி இடைத்தேர்தலில் ரெங்கசாமி தலைமையிலான என்.ஆர்,. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தமிழ்செல்வன் 8ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
14 சுயேட்சை வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

Leave a Reply